பெருநாள் நினைவுகள்



பெருநாள் நினைவுகள்

எப்பொழுதும் பெருநாள் வந்தாலே சிறு வயதில் கழித்த பெருநாள் கொண்டாட்டங்கள் தான் நினைவுக்கு வரும்.

அப்பொழுது இருந்த கொண்டாட்டம், குதூகலமான மனநிலை தற்பொழுது இல்லை.இயந்திர வாழ்க்கையில் அதுவும் மாறித்தான் போகிறது அல்லது அந்தளவு சுவாரசியமின்மையும் காரணமாக இருக்கலாம்.

இங்கு சிங்கையில் பெருநாள் என்றால் காலையில் 8 அல்லது 8.30 பெருநாள் தொழுகை பள்ளியிவாசல்களில் நடைபெறும்.இங்கு 70% பள்ளிகளில் பெண்களுக்கான இடவசதியும் செய்து தரப்படுகிறது.

நான் இங்கு வந்தபிறகு தான் பெருநாள் தொழுகை பள்ளிகளில் தொழ ஆரம்பித்திருக்கிறேன்.இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்தியாவில் இருந்த வரை வீட்டில் தான் தொழுகை.அனைவருடன் சேர்ந்து தொழும் போது மிகவும் அருமையாக இருக்கிறது.எப்பொழுதும் கூட்டு ப்ரார்த்தனைக்கு பலன் அதிகம் அல்லவா..

நானும் அம்மாவும் அம்மா வழி தாத்தா வீட்டில் தான் அதிக வருடங்கள் தங்கியிருந்தோம்.அங்கு பெருநாளுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னாடியே என் பாட்டிஉனக்கு ஸ்பெஷலாக என்ன செய்து தர வேண்டும் என்று கேட்பார்கள்.நானும் முடிந்த அளவு பொரித்த பராட்டா, ஜாலூர் பராட்டா என்று லிஸ்ட் குடுப்பேன்.நம்மிடம் கேட்டு செய்கிறார்களே என்று குஷியாக இருக்கும்.

எங்கள் ஊர் பக்கம் காலை பசியாற அதிகம் செய்வார்கள்.குறைந்தது 10 அல்லது 12 ஐட்டங்களாவது இருக்கும்.மதியம் சிம்பிளாக தான் செய்வார்கள்.காலை உணவு ஹெவியாக இருக்கும் என்பதால் யாரும் அதிகம் சாப்பிட மாட்டார்கள்.சிலர் மதிய உணவையே சாப்பிட மாட்டார்கள் என் அம்மா சின்னம்மா பாட்டி மாதிரி :)

காலை பசியாற பராட்டா, பொரிச்ச பராட்டா, ஜாலூர் பராட்டா, ஜாலூர், வட்டலாப்பம், இடியாப்பம், பராசப்பம், சமோசா, இட்லி, கடல்பாசி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு என்று இருக்கும்.இது தான் எங்கள் பாட்டி வீடு பெருநாள் மெனு.

டைப்பண்ணும் போதே வாய் ஊறுகிறது.வெளிநாட்டில் இருந்து கொண்டு நினைத்து பார்த்து ஜொள்ளு விட தான் முடியும்.இங்கு நான்கு ஐட்டம் செய்தாலும் சாப்பிட ஆளில்லை.

நட்புகளுக்கு தனியாக உணவு அனுப்பி விடுவார்கள்.

வீட்டு வேலையாட்கள், ரெகுலராக வரும் மீன் விற்பவர்கள், காய்கறிகார அம்மா மற்றும் வீடு தேடி வரும் தெரிந்தவர்க்கு எல்லாம் பெருநாள் உணவும் பணமும் குடுப்பார்கள்.

பாட்டி வீட்டு பழக்கத்தில் அனைத்து ஐட்டங்களையும் பெருநாளை தொடர்ந்து வரும் வாரயிறுதிகளில் 2, 3 ஆக செய்து விடுவேன்.என்னவர் தான் இன்னும் உனக்கு பெருநாள் முடியவில்லையா என்று கேலி செய்வார்.

எனது மாமியார் வீட்டில் காலையில் அதிகம் செய்ய மாட்டார்கள்.4 அல்லது 5 வகை தான் இருக்கும்.மதியம் பெரிய அளவில் செய்வார்கள்.பிரியாணி, தால்ச்சா,சிக்கன் ப்ரை, புளிப்பு பச்சடி, இனிப்பு பச்சடி, முட்டை, தயிர் சட்னி, பிர்னி என்று அமர்க்களமாக இருக்கும்.நானும் இப்பொழுது இதை ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டேன்.அதில் எனது கணவருக்கும் மாமியாருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.என் மாமியார் என்னை மாதிரியே சிங்கையில் இருந்தாலும் செய்கிறாய் என்று சந்தோஷபடுவார்கள்.

பதிவு நீளமாக இருப்பதால் பெருநாள் கொல்லை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



1 கருத்துகள்:

  1. பெருநாள் பற்றி உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் ஷமீ. உங்கள் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes